கூகுள் மேப் செயலியின் உதவியால் நேபாளத்திற்கு சைக்கிள் மூலம் செல்ல முயன்ற 2 பிரான்ஸ் நாட்டினர் உத்தரப் பிரதேசத்தில் வழி தொலைந்துள்ளனர்.
கடந்த ஜன.7 அன்று விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா வந்த பிரயன் ஜாக்குவஸ் கில்பர்ட் மற்றும் செபாஸ்டியன் ஃபிரான்கோயிஸ் கேபிரியல் ஆகிய இருவர், கூகுள் மேப் செயலியின் உதவியோடு தில்லியிலிருந்து சைக்கிள் மூலமாக நேபாள தலைநகர் காத்மண்டுவிற்கு செல்லும் முயற்சியில் தங்களது பயணத்தை துவங்கியுள்ளனர்.
அந்த பயணத்தில் அவர்கள் உ.பியின் பிலிபிட் வழியாக காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கடந்த ஜன.23 பரேலி வழியாக ஓர் குறுக்கு வழி இருப்பதாக அந்த செயலி காட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து, செயலி காட்டிய பாதையை பின் தொடர்ந்து சென்ற அவர்கள் சுராய்லி அணைப் பகுதியிலுள்ள கிராமத்தில் வழி தொலைந்துள்ளனர்.
இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து!
இந்நிலையில், அன்றிரவு 11 மணியளவில் ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான சாலையில் வெளி நாட்டவர் இருவர் சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி கிராமத்துவாசிகள் அவர்களை அனுகி விவரம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பேசிய மொழி புரியாததினால் அவர்கள் இருவரையும் சுராலி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு, அவர்களிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர் இருவரையும் அன்றிரவு அந்த கிராம ஊராட்சி தலைவரின் வீட்டில் தங்கவைத்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறை உயர் அதிகாரி அனுரக் ஆர்யாவின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை (ஜன.24) காலை இருவருக்கும் அவர்களது பயணத்திற்கு முறையான வழியைக் கூறப்பட்டு கிராமவாசிகளின் ஆராவாரத்துடன் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.