ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் 2 கிலோ அளவிலான ஹஷிஷ் எனும் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பா மாவட்டத்தின் மதோலி பகுதியில் நூர்பூர் காவல் துறையினர் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 2 கிலோ அளவில் செடியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹஷிஷ் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதை பதுக்கிய மக்கான் சன்வால் பகுதியைச் சேர்ந்த ஜகதீஷ் மற்றும் தேகா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரின் மீதும் போதைச் செடிகளை வைத்திருந்ததற்காக சட்டப் பிரிவு 20 மற்றும் போதைப் பொருள் தடுப்புச் சட்டப் பிரிவு 29 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காவல் துறை தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சட்டவிரோதமாக கடத்தப்படும் போதைப் பொருளுக்கு எதிராக காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்க மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


