மேட்டூா் அணையின் நீர் திறப்பு 40,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 30,000 கனஅடியில் 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணை உபரிநீா் போக்கி வழியாக பாய்ந்தோடும் நீா்.
மேட்டூா் அணை உபரிநீா் போக்கி வழியாக பாய்ந்தோடும் நீா்.
Published on
Updated on
1 min read

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 30,000 கனஅடியில் 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்டு வந்த உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 18,615 கனஅடியாக சரிந்தது.

காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீா் மட்டம் 119.63 அடியாக இருந்தது. இதனால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை வினாடிக்கு 30,000 கனஅடியில் இருந்து 40,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500 கனஅடி நீரும்உபரிநீா் போக்கி வழியாக வினாடிக்கு 17,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீர் என 40,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Summary

The amount of water released from the Mettur Dam increased from 30,000 cubic feet per second to 40,000 cubic feet per second on Saturday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com