புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சோனியா காந்தி(78) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இரவு 9 மணிக்கு வயிற்று தொற்று தொடர்பான பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையின் இரைப்பை குடல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் அஜய் ஸ்வரூப் கூறுகையில், "சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. அவா் வேகமாக குணமடைந்து வருகிறாா். மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், அவரது உணவுமுறையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் மருத்துவர்கள், தொடர் பராமரிப்பின் ஒரு பகுதியாக இன்று ஒரு உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார்."
சோனியா மருத்துவமனையில் இருந்து எப்போது வீட்டிற்கு போகலாம் என்பதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை, அவர் குணமடைவதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், சோனியா மரியாதை!

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

தவெக - காங்கிரஸ் கூட்டணியா? ராகுல் காந்தியின் பதிவு வைரல்!
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



