பதற்றமில்லாமல் தேர்வு எழுதுங்கள்: மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் வாழ்த்து

பதற்றமில்லாமல் தேர்வு எழுதுமாறு பொதுத்தேர்வு எழுதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (கோப்புப்படம்)
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பதற்றமில்லாமல் தேர்வு எழுதுமாறு பொதுத்தேர்வு எழுதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12- ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவச்செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே மார்ச் 3 மற்றும் 5 ஆம் தேதி தொடங்க இருக்கின்றன. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் உதயநித ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதற்றமும் வேண்டாம்.

படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள்.

தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம்.

தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்! என கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com