நேபாள நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்ஸு ரானா டியூபா இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இந்தியவில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்ஸு ரானா டியூபா இன்று (மார்ச் 14) புது தில்லி வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 10 அன்று தெய்வீக வழிபாட்டுக்காக அமைச்சர் டியூபா இந்தியா வந்துள்ளதாக நேபாள வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 12 அன்று ஜார்க்கண்டிலுள்ள பாபா பைதியநாத் தாம் மற்றும் பஸுகிநாத் ஆகிய கோயில்களில் அவர் வழிபாடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வருகின்ற மார்ச் 17 முதல் 19 வரை இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடைபெறவுள்ள ‘ரைசினா உரையாடல் -2025’ மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார். மேலும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று கடந்த 2024 ஆகஸ்டில் இந்தியாவிற்கு டியூபா வருகைத் தந்திருந்தார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.
முன்னதாக, ரைசினா உரையாடல் என்பது புவிசார் அரசியல் மற்றும் புவி பொருளாதாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் முக்கிய மாநாடாகும், இதில் சர்வதேச அளவிலான பிரச்சனைகளைத் தீர்க்க தேவையான முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
மேலும், இந்த மாநாட்டில் இந்தியாவின் அழைப்பை ஏற்று சர்வதேச நாடுகளின் பிரதமர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிஜ உலகில் வாழுங்கள்: கமேனி - டிரம்ப் சந்திப்பு தொடர்பாக ஈரான் கருத்து!

இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முன்னுரிமை: நேபாள வெளியுறவு அமைச்சா்
இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்

உலகளாவிய சவால்களை எதிா்கொள்ளும் வழிகளை ‘பிரிக்ஸ்’ கண்டறிய வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



