பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

முடங்கிக்கிடக்கும் ரயில்வே திட்டங்கள் ஆய்வு: அஸ்வினி வைஷ்ணவ் ஜூன் 6-ல் கொல்கத்தா பயணம்

மேற்கு வங்கத்தில் முடங்கிக்கிடக்கும் பல்வேறு ரயில்வே திட்டங்களின் பணிகள் குறித்து அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு நடத்த இருப்பது தொடர்பாக...

News image

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு - டிஎன்எஸ்

Updated On :4 ஜூன் 2026, 9:43 am IST

மேற்கு வங்கத்தில் முடங்கிக்கிடக்கும் பல்வேறு ரயில்வே திட்டங்களின் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை(ஜூன் 6) கொல்கத்தா செல்லவுள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஷிபாஜி மாஜி தெரிவித்ததாவது:

மேற்கு வங்கத்தில் முடங்கிக்கிடக்கும் பல்வேறு ரயில்வே திட்டங்களின் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை கொல்கத்தா வரவுள்ளார்.

ரயில்வே அமைச்சர், மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு எல்லை மற்றும் மெட்ரோ ரயில்வே ஆகிய மண்டலங்களின் பொது மேலாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் ரயில்வே உள்பட மாநிலத்தில் தேங்கி நிற்கும் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆய்வு அமையும் என்றும், இது ரயில்வே மேம்பாடு தொடர்பான மத்திய-மாநில உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் மாஜி தெரிவித்தார்.

கொல்கத்தா மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளையும் திட்டங்களின் வேகத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

மேலும், ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களும் சனிக்கிழமை பிற்பகல் கொல்கத்தா வருகை தர உள்ளதாகவும், அன்று மாலை பல்வேறு ரயில்வே சார்ந்த அமைப்புகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக மாஜி கூறினார்.

மேற்கு வங்கத்தில் பல ரயில்வே திட்டங்கள், குறிப்பாக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விஷங்களில் மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் தாமதமாவதாக, கடந்த மார்ச் மாதம் வைஷ்ணவ் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Union Railway Minister Ashwini Vaishnaw is scheduled to arrive in Kolkata on Saturday to expedite the progress of various stalled railway projects in West Bengal...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.