மேக்கேதாட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை கேள்வி கேட்காமல் மௌனமாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
மேக்கேதாட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்?
இப்போதும் முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் உரிமைக்காக உறுதியான நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆனா "கனெக்டிங் கால்" பேசுற" பேசுற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி … எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் கேள்வி கேக்கல?
பிரதமர் நரேந்தி மோடி உடனடியாக மேக்கேதாட்டு முன்மொழி திட்டத்தை ரத்து செய்து, காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமை பங்கை பாதுகாக்க வேண்டும்.
அதனை முதல்வரின் கடிதம் தெளிவாக சொல்கிறது.
இந்த முன்மொழித் திட்டம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு்கும் காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கும் எதிரானது. மேலும், லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.
இது அரசியல் விவகாரம் இல்ல.
இது நம்ம நீர்…
நம்ம விவசாயிகள்…
நம்ம தமிழ்நாடு உரிமை.
தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல் காவிரியில் எந்த திட்டமும் வரக்கூடாது.
முதல்வர் கடிதத்துக்கு முழுமையான ஆதரவு. தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒன்றாக நிற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Why are Opposition leader Udhayanidhi and Ex CM Edappadi Palaniswami remaining silent mode on the Mekedatu issue?...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு விவகாரம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!






