டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து முகம் பளிச்சிட வேண்டுமா?

முகத்தில் பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும்.

News image
Updated On :15 ஜூன் 2018, 11:17 am IST

முகத்தில் பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும். அதற்கு ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக் கொண்டு அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

சிலருக்கு முகத்தில், மூக்கில், கன்னங்கள் என கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராமப்புறத்தில் 'மங்கு' என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரில் கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த சாந்தை முகத்தில் உள்ள கருப்பு திட்டுகள் மீது தடவுங்கள். வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கருந்திட்டு மறைந்துவிடும்; முகமும் பொலிவு பெறும். 

Story image

பாதாம் பருப்பை ஊறவைத்து பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து விழுது போன்று ஆக்கி, இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி வர முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து முகம் பளிச்சிடும். 

கடலை மாவு, பாசி பயறு இரண்டையும் அரைத்து வைத்து கொண்டு தினமும் காலையில் குளிக்கப் போகும் முன் ஒரு கைப்பிடி மாவை எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி, அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்துவிடுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இது போன்று செய்து வந்தாலே முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்து முகம் பளபளப்பாவதை உங்களால் உணரமுடியும். 

Story image

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல இயற்கை க்ளென்சராகும் (CLEANSER). குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின் முகத்தை கழுவி விட . இது ஒரு சிறந்த கிளென்சிங் ஆகும்.

இளநீரும் ஒரு மிகச்சிறந்த கிளென்சிங் பொருள். எனவே தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவி வர முகம் பளிச்சிடும். 

Story image

இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கி முகம் பளிச்சிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.