கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சரும அழகுக்கு தக்காளி ஃபேஷியல்...வீட்டிலேயே செய்யலாம்!

சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவாக இருக்க தக்காளி சிறந்த உணவுப் பொருளாகவும் அழகுப் பொருளாகவும் இருக்கிறது. 

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 11:29 am

தினமணி

சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவாக இருக்க தக்காளி சிறந்த உணவுப் பொருளாகவும் அழகுப் பொருளாகவும் இருக்கிறது. 

தக்காளியில் வைட்டமின் சி, ஏ, கால்சியம் உள்ளிட்டவை இருப்பதால், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையுடன் இருக்கலாம். 

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துவதால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும். 

தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதுடன், சருமம் மேலும் பொலிவாக இருக்க தக்காளியைப் பயன்படுத்தி பேஷியல் வீட்டிலேயே செய்யலாம். 

முக்கிய விழாக்களுக்கு முன் பலரும் இன்று அழகு நிலையங்களை நாடுவது வழக்கமாகிவிட்ட நிலையில் சற்று மாற்றாக வீட்டிலேயே இந்த தக்காளி பேஷியலை செய்து பாருங்கள். 

தக்காளி பேஷியல்

முதலில் தக்காளிச் சாறுடன் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதனால் முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். 

பின்னர் உங்களுடைய முகத்திற்கு ஏற்றுக்கொள்ளும்படியாக கடலைமாவு அல்லது பாசிப்பயறு மாவு, இத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து கலக்கவும். தக்காளிச் சாறு சில துளிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

இரண்டாக வெட்டிவைத்த தக்காளியின் ஒரு பகுதியை எடுத்து கலவையில் மூழ்க வைத்து எடுத்து முகத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். குறைந்தது 5 நிமிடம் முகம், கழுத்துப்பகுதி முழுவதும் ஸ்க்ரப் செய்துவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசி சுத்தமான துணியால் லேசாக துடைத்து எடுங்கள். மூன்றாவதாக இதனை பேஸ் பேக்காகவும் ஒருமுறை போட்டு 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். அவ்வளவு தான்! 

வாரத்தில் ஒருமுறை அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை இந்த பேஷியலை செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.