அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

வீட்டிலேயே செய்யலாம்...கேரட் பேஷியல்!

பொதுவாக விசேஷங்கள் என்றால் பலரும் அழகு நிலையங்களுக்குச் சென்று பேஷியல் செய்துகொள்வது வழக்கம். 

News image

கோப்புப்படம்

Updated On :7 செப்டம்பர் 2021, 2:46 pm IST

பொதுவாக விசேஷங்கள் என்றால் பலரும் அழகு நிலையங்களுக்குச் சென்று பேஷியல் செய்துகொள்வது வழக்கம். 

ஆனால், வீட்டிலேயே வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி பேஷியல் செய்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு பொருள்களை தேர்வுசெய்துகொள்ள வேண்டும். 

சருமத்தை புத்துணர்ச்சியுடன் இளமையாக வைத்துக்கொள்ள கேரட்டிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. தினமும் ஒரு கேரட் ஜூஸ் குடித்துவர முகம் பொலிவடைவதை நீங்கள் உணர முடியும். 

அழகு நிலையங்களில் ப்ரூட் பேஷியல், ஆர்கானிக் பேஷியல் என்பது இயற்கையான பேஷியல் என்று சொல்லப்பட்டாலும் அதில் கெமிக்கல் இருக்கத்தான் செய்யும். பேஷியல் செய்த சில நாள்கள் முகம் பொலிவுடன் இருக்கும். மீண்டும் சிலருக்கு கருமடைய ஆரம்பிக்கும். 

ஆனால், வீட்டில் ரசாயனம் ஏதுமின்றி இயற்கையான பொருள்களை பயன்படுத்தும்போது பலன் சற்று தாமதமாக கிடைத்தாலும் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

இப்போது கேரட்டை பயன்படுத்தி எவ்வாறு பேஷியல் செய்வது என்று பார்க்கலாம்..

கேரட் பேஷியல் 

முதலில் ஒரு கேரட்டை எடுத்து பொடிப்பொடியாக நறுக்கியோ அல்லது துருவிய பின்னரோ மிக்சியில் போட்டு அரைத்து சாறினை தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 

இப்போது சிறிது கேரட் சாறுடன் பால் சேர்த்து கலந்து அந்த கலவையை ஒரு பஞ்சால் நனைத்து முகத்தில் தடவுங்கள். 2 அல்லது 3 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்யவும். ஒரு 5 நிமிடம் காயவிட்டு பின்னர் முகத்தைக் கழுவுங்கள். 

அடுத்ததாக, கடலைமாவு, சிறிதளவு மஞ்சள் தூள், கேரட் சாறு, தேவைப்பட்டால் சிறிது தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இப்போது 15 அல்லது 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவிவிடுங்கள். 

முன்னதாக, இதே கலவையை வைத்து முகம் மற்றும் கழுத்துப்பகுதி முழுவதும் ஸ்க்ரப் செய்யலாம். 

இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்துவர முகம் பளபளப்பாக மாறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.