சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்குவதற்கு பலரும் பல செயற்கை கிரீம்களை பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால், வீட்டில் உள்ள எளிய பொருள்களை பயன்படுத்தியே எண்ணெய்ப் பசை சருமத்திற்கு தீர்வு காணலாம்.
தேவைப்படும் பொருள்கள்
- புதினா இலைச்சாறு
- எலுமிச்சை சாறு
- முல்தானிமட்டி
- ரோஸ் வாட்டர்
மேற்குறிப்பிட்ட இந்த நான்கையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்து கலந்துகொள்ளவும். இப்போது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட்டு சுத்தமான துணியால் துடைத்துவிடுங்கள்.
இப்போது இந்த பேக்கினை முகத்தில் அப்ளை செய்துவிட்டு ஒரு 15 நிமிடம் வரை காத்திருங்கள்.
முல்தானிமட்டி நன்றாக வறண்டுவிடாமல் லேசான ஈரப்பதம் இருக்கும்போது முகத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள்.
இந்த கலவை சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை உறிஞ்சி சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவும்.
வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்துவரலாம்.
இதையும் படிக்க | புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பாக இருக்கும்: சோபிதா துலிபாலா

திருநாகேஸ்வரம் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலம்

ஜிவி பிரகாஷ் நடிக்கும் வெக்கை! போஸ்டர் வெளியீடு!

திமுகவை ஏன் கேள்வி கேட்கவில்லை? பத்திரிகையாளரை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



