உருளைக் கிழங்கில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சிறிய அளவிலான பேபி உருளை என்றால் அவர்கள் மறு வார்த்தைப் பேசாமல் சாப்பிட்டுவிடுவார்கள். குளிர்காலத்தில் பேபி உருளைக்கிழங்குகளின் சீசன் என்பதால், இந்த மாதத்தில் பேபி உருளையை வெரைட்டியாகச் சமைத்து அவர்களுக்குத் தரலாம்.
தேவையான பொருட்கள் :
பேபி பொட்டேடோ - 200 கிராம்
குடை மிளகாய் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 50 கிராம்
இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு - 10 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
கார்ன்ஃப்ளார் - 100 கிராம்
வெங்காயத்தாள் - 10 கிராம்
தக்காளி - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
தக்காளி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை சதுரமாக வெட்டிகொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பேபி பொட்டேடோவை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் பேபி பொட்டேடோவை சேர்த்து பிசறி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.
அனைத்தும் சிறிது வதங்கியதும் இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடைசியாக பொரித்த உருளை, தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் சைட் டிஷ் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



