தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த நம்மில் பலரே, பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் போது சரளமாக ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கி விடுகிறோம். தமிழில் ஏன் பேசுவதில்லை? என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் பேசுவது கெத்து என்பதைத் தவிர பொருத்தமான விடையேதும் இல்லை.
ஆனால், இந்த சீனப்பெண்ணைப் பாருங்கள். கிள்ளைத் தமிழில் கொஞ்சிக் கொஞ்சி இவர் பேசுவதைக் கேட்கும் போது நம் முகம் மட்டுமல்ல உள்ளமும் கூட தானாகப் புன்னகையில் மிதக்கத் தொடங்கி விடுகிறது. எல்லாம்... அந்நிய தேசப் பெண்ணின் வாயிலிருந்து அழகுத் தமிழோசை கேட்க வாய்த்த பெருமையில் தான்.
நீங்களே இந்த காணொலியைப் பாருங்களேன்...