தமிழகத்தில் 18.8 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள் என்று ‘யுனிசெப்’ நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. சிலர் வேலைப்பளு காரணமாகவும், சிலர் தங்களது குழந்தைக்குத் தாய்ப்பால் போதவில்லை என்ற காரணத்தாலும், மேலும் சிலர் தாய்ப்பாலூட்டுவதால் அழகு கெட்டு விடும் என்ற காரணத்தாலும் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர்த்து புட்டிப்பாலைப் பழக்கத் தொடங்குகின்றனர். புட்டிப்பால் குழந்தையின் அந்த நேரத்து வயிற்றுப் பசியைத் தீர்க்க உதவுமே தவிர அதில் குழந்தையின் பிற்கால ஆரோக்ய வாழ்வைக் கட்டமைப்பதற்கான எந்த ஒரு சிறப்பு அம்சங்களும் இல்லை என்பதை அந்தந்த புட்டிப்பால் நிறுவனங்களே அவரவர் பால் டப்பாக்களில் அச்சிட்டு விற்பனை செய்கின்றன என்பது நாமறிந்த உண்மை. ஏனெனில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதோடு மட்டுமல்ல, குழந்தையின் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கும் சக்தியும் கூடத் தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு. எனவே தாய்ப்பாலுக்கு ஈடாக புட்டிப்பாலை எப்போதுமே மதிப்பிடவே முடியாது.
பெண்களிடையே இந்த எண்ணத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் பெண்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே இனியும், பக்கத்து வீட்டுக் குழந்தை புட்டிப்பால் குடித்து கொழு,கொழுவென்று இருக்கிறதே என்று உங்கள் குழந்தைக்கும் தாய்ப்பால் போதவில்லை எனப் புட்டிப்பால் கொடுத்துப் பழக்க நினைக்க வேண்டாம். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் போதவில்லை என்ற நினைப்பெல்லாம் இன்றைய நாகரீக அம்மாக்களின் வீணான மனப்பிராந்தி, அப்படி நினைத்துத்தான் பெரும்பாலான இளம்அம்மாக்கள் தங்களது குழந்தைகளை தாய்ப்பாலில் இருந்து புட்டிப் பாலுக்கு பழக்கி விடுகிறார்கள். மனிதர்கள் மட்டும் தான் இப்படி புட்டிப்பால் குடித்துப் பழகி இருக்கிறார்களே தவிர குட்டி போட்டுப் பால் கொடுக்கும் மரபைச் சார்ந்த பிற விலங்குகளைப் பாருங்கள், அவற்றில் எந்த ஒரு தாய்க்கும், தன் குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்ற பிரச்னையே இருப்பதில்லை. இயற்கையில்; பிரசவமான எல்லாத் தாய்மார்களிடத்தும் தங்களது குழந்தையின் பசியைப் போக்கிடத் தேவையான பாலைச் சுரக்கும் தகுதி உண்டு. ஆனால் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக நம்முள் காலம், காலமாக நிலவி வரும் சில மாறுபட்ட கருத்துகள், மற்றும் முரண்பாடுகளால் தற்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது எனும் அத்யாவசியமே அறுகி வருகிறது.
- சிசேரியன் டெலிவரியா அப்போ குழந்தைக்கு குறைந்தபட்சம் 5 நாட்களாவது புட்டிப்பால் தான்...
- தாய்ப்பால் குடித்துப் பழகிய குழந்தை மணிக்கொரு தரம் பசிக்கு அழுகிறதா? உடனே தாய்ப்பால் போதவில்லை என புட்டிப்பாலையும் அதனுடன் சேர்த்துக் கொடுத்துப் பழக்கி.. நாளடைவில் குழந்தை தாயிடம் பாலருந்தும் பழக்கத்தையே மறக்கடித்து விடுவது.
- வேலைக்குப் போகும் அம்மாவா.. அப்போ புட்டிப்பால் கொடுத்துப் பழக்குவது தான் குழந்தைக்கும், அம்மாவுக்கும் நல்லது.
- ஷிஃப்ட் முறையில் வேலை பார்க்கும் அம்மாவா? அப்போதும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு புட்டிப்பால் தான் சரியாக இருக்கும்.
- அப்படியெல்லாம் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் அம்மாக்கள் என்றாலும் கூட தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் போஷாக்கு, புட்டிப்பால் குழந்தையுடன் ஒப்பிடுகையில் சோனியாகத் தெரிந்தால் அப்போதும் கூட உடனடி சாய்ஸாக கண் முன்னே வந்து நிற்பது லாக்டோஜனும், Non மில்க் பவுடரும் தான்.
இந்த புட்டிப்பால் வகைகள், குழந்தைகளின் போஷாக்கிலும், தோற்றப்பொலிவிலும் அம்மாக்களின் மனதுக்குத் திருப்தி தருகிற வகையிலான சில உடனடி மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் கூட அவற்றின் பிற்கால எதிர்மறைப் பயன்களை நோக்கும் போது அவை விரும்பத்தக்கவையாக இல்லை. இதைப்பற்றிப் பேசும்போது மகப்பேறு மருத்துவரான டாக்டர் ரமாதேவி கூறுவதைக் கேளுங்கள்;
Image courtesy: babycenter.ca
மாதவிடாய் நாட்களை வலியின்றி கடக்கப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?!
4 ஆண்டுகளாக மழைநீரை மட்டுமே குடிநீராக அருந்தி உயிர்வாழும் ‘மழைநீர் மனிதர்’ தேவராஜ்!
மூளைச்சாவு அடைந்த நிலையிலும் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த அதிசயப் பெண்!
கி.ரா வின் ‘அந்தமான் நாயக்கர்’
உஷார்... நாம் அருந்தும் பழச்சாறுகளில் கிருமிகள் மற்றும் ரசாயனக் கலப்படம் இருந்தால்?!