டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

விண்வெளியில் விளைந்த முட்டைக்கோஸ்!

விண்வெளி ஆய்வு மையத்தில் முதல் முறையாக சீன முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2017, 10:44 am IST

விண்வெளி ஆய்வு மையத்தில் முதல் முறையாக சீன முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி ஒரு மாத காலத்தில் இந்த முட்டைக்கோஸ் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளதாவது:
விண்வெளி ஆய்வு வீரர் பெக்கி விட்சன் இந்த முட்டைக்கோஸை விளைவித்து அறுவடை செய்துள்ளார். அதில் சிலவற்றை விண்வெளி ஆய்வு மையத்தினரே அங்கேயே சாப்பிட்டுவிட்டனர். மீதமுள்ளதை நாசா கென்னடி விண்வெளி மையத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகை காய்கறிகளை ஆராய்ந்த பிறகு விண்வெளியில் பயிரிட இந்த சீன முட்டைக்கோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது விண்வெளியில் பயிரிடப்படும் ஐந்தாவது பயிராகும். முந்தைய பயிர்களை ஒப்பிடும்போது "டோக்யோ பெக்கன்னா' என்று அழைக்கப்படும் சீன முட்டைக்
கோஸ் சுவைமிகுந்ததாக இருந்தது.

வழக்கமாக விண்வெளியில் உள்ள ஆய்வு வீரர்களின் நாவின் சுவை குறைவாக இருக்கும். புவிஈர்ப்பு சக்தி இல்லாததால் நீர்சத்து உடல் முழுவதும் பரவி இருப்பது இதற்கு காரணம். இதற்காக அவர்கள் சாப்பிடும் உணவில் காரமான சாஸ், தேன், சோயா சாஸ் ஆகியவற்றை அதிமாகப் பயன்படுத்துவார்கள்.

விண்வெளி ஆய்வு மையத்தில் பயிரிடுவதற்காக அடுத்த பயிர் வகை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அது சீன முட்டைக்கோஸ் அருகே வைத்து பயிரிடப்படும். அப்போதுதான் எந்த பயிர் விரைவில் அறுவடைக்குத் தயாராகிறது என்பது குறித்தும் தெரிந்துவிடும். 

அடுத்த கட்டமாக அராபிடோபிஸ் எனப்படும் சிறிய வகை பூச்செடியைப் பயிரிடத் திட்டமிட்டுள்ளோம்.  இதன் மூலம் பூமிக்கு வெளியே உள்ள பல்வேறு சூழ்நிலைகளில் செடிகள் எப்படி தங்களை மாற்றிக் கொண்டு வளர்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் வருங்காலங்களில் விண்வெளியில் பயிர்த் தோட்டங்களை அமைக்கலாம் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.