மனிதன் தோன்றிய காலத்தில், நாளொன்றுக்கு அவன் பயன்படுத்திய உப்பின் அளவு வெறும் 1/2 கிராம் மட்டுமே! ஆனால், இன்று நாளொன்றுக்கு தனிநபர் ஒருவர் பயன்படுத்தும் தினசரி அளவு 12 கிராம் ஆக உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக நாம் கவனித்தாக வேண்டிய விஷயம், மேற்கத்திய நாடுகளில் இயங்கும் பன்னாட்டு உணவுத் தொழிற்சாலைகளின் மிக மோசமான லாபி அந்தந்த நாட்டு அரசாங்கங்களை உப்புகெதிரான கொள்கைகளையும், தடைகளையும் கொண்டு வருவதை கடுமையாகத் தடுக்கிறது. ஐக்கிய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு நீடித்த தொடர் போராட்டத்தின் பின் தற்போது அங்கே சீரியல்கள் என்று சொல்லக் கூடிய சைவை உணவுப் பொருட்களில் மட்டும் கிட்டத்தட்ட 50% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல ப்ரெட்டில் 30% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், உணவு பதப்படுத்தலில் உப்பின் தேவை அதிகமிருப்பதால் பன்னாட்டு உணவுத் தொழிற்சாலைகள் தொடர்ந்து உப்பைக் குறைக்கும் முயற்சிகளுக்குக் பெருத்த தடையாகவே நீடித்து வருகின்றன. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தாலொழிய இவ்விஷயத்தில் பூரண வெற்றி கிட்டாது.