நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உலகில் அதிக மக்கள் பேசக்கூடிய மொழியைக் கற்க ஆசையா?

உலகில் அதிகம் மக்களால் பேசப்படக்கூடிய மொழி என்ற பெருமை சீனாவின் மாண்டரீன் மொழிக்கே உரியது.

News image
Updated On :29 நவம்பர் 2017, 4:36 pm IST

உலகில் அதிக மக்களால் பேசப்படக் கூடிய மொழி எது? 

பெரும்பாலானோர் ஆங்கிலம் என்று பதில் சொல்வீர்களானால்.. அது தவறு.

உலகில் அதிகம் மக்களால் பேசப்படக்கூடிய மொழி என்ற பெருமை சீனாவின் மாண்டரீன் மொழிக்கே உரியது. சீனாவின் கலாச்சாரம், சீன மக்களின் வாழ்க்கைமுறை, அவர்களது பழக்க வழக்கங்கள் பழம்பெருமை வாய்ந்த சீனப் பண்பாடு இத்தனையையும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் மாண்டரின் மொழியைக் கற்றுக் கொண்டால் மட்டுமே அதனை எளிதாகக் கைக்கொள்ள முடியும். உலகிலேயே கற்பதற்குக் கடினமான மொழி என்றால் அது சீனமொழியே என்போரும் உண்டு. ஏனெனில் சீன மொழியில் எழுத்துருவங்கள் ஒவ்வொன்றும் படம் வரைவதைப் போல சித்திர வடிவமாகவே இருக்கும். அவற்றை படித்து மனதில் இருத்துவது கடினம் என்று நினைப்போரும் உண்டு. ஆனால், இந்த எண்ணத்தைப் பொய்யாக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக சீனமொழியான மாண்டரினைக் கற்றுத் தர கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று முடிவெடுத்துள்ளது.

அதன்படி மாண்டரின் கற்றுத்தர இந்தியாவின் முதல் கன்ஃபூசியஸ் பள்ளியொன்று கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளது.  சீனாவுக்கான இந்தியத் தூதரான ஜெனரல் மா ஷான்வூ இந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். சீனாவில் இயங்கும் யுன்னான் நார்மல் பல்கலைக்கழகமும், கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலமாகக் கற்பவர்களுக்கு மொழிப்பாடம் மட்டுமன்றி சீன நடனம் மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் என்று சொல்லப்படக் கூடிய தற்காப்புக் கலை உள்ளிட்டவையும் கற்றுத்தரப்படவிருக்கிறதாம். 

உலக மக்கள் தொகையில் முதலிரண்டு இடத்தைப் பெற்று கடல் போலப் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் இந்திய மற்றும் சீன மக்களிடையே நட்புறவை வளர்க்க இது ஒரு சிறிய முயற்சியே, இந்தியா, சீனா இடையே நட்பை வளர்க்க இந்தச் சிறு முயற்சி உதவலாம் என இந்தியாவுக்கான சீனத்தூதர் மா ஷான்வூ தெரிவித்தார்.

கன்ஃபூஷியஸ் என்பது ஒரு வாழ்க்கை முறைத் தத்துவம். அந்த தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இப்பள்ளிகளில் கலாச்சாரம், இலக்கியம், புவியியல் உள்ளிட்ட பாடங்களுடன் இந்தோ, சீன கூட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க உதவும் விதமாக கலை சார்ந்த விஷயங்களும் கற்றுத்தரப்பட உள்ளதாக இந்தியாவுக்கான சீனத்தூதர் தெரிவித்தார்.

Related Article

உயிர்வேலிகளை உருக்குலைத்து கம்பிவேலிகளை உருவாக்கி பயிர்களுக்கு உலை வைத்தவர்கள் அறிவார்களா இதை?!

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வரக் காரணமான உப்பு அரக்கனை தலையில் தூக்கிச் சுமப்பவை இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்களே!

நமுத்துப் போன பிஸ்கெட்டுகளை என்ன செய்யலாம்?

தனிநபர்  ‘சைபர் கிரைம் இன்ஸூரன்ஸ்’ காப்பீடு - ஆன்லைன் திருட்டுகளைச் சமாளிக்கப் பிறந்த புதிய திட்டம்!

ஒரு அன்றாடங்காய்ச்சியின் வருட வருமானத்திற்கு நிகராம் இந்த நட்சத்திர குழந்தையின் ஷூ விலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.