மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உங்களாலும் முடியும்! நம்புங்கள்

சென்னை வள்ளுவர்கோட்டத்தை அடுத்து அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அளித்து வரும்

News image
Updated On :23 செப்டம்பர் 2018, 10:25 am

ஸ்ரீதேவி

சென்னை வள்ளுவர் கோட்டத்தை அடுத்து அமைந்துள்ளது அன்னை தெரசா மகளிர் வளாகம். அங்கு 'மாடித் தோட்ட  பயிற்சி'யை சுயஉதவிக் குழு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில், அங்கு மாடித் தோட்ட பயிற்சி பெற்று, தற்போது மாடி தோட்ட பயிற்றுநர்களாக மாறியிருக்கின்றனர் 'மாடித் தோட்ட தொழிற் குழு' அமைப்பினர்களான  ரேவதி, ஸ்ரீமதி, புனிதா, காஞ்சனா  ஆகிய நால்வர். அவர்களில் ரேவதி  நம்மிடம் பகிர்ந்து கொண்டவை: நாங்கள் நால்வரும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொருவரும் தனித்தனியாக சுயஉதவிக்குழுவை நடத்தி வருகிறோம். சமீபத்தில் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மாடித் தோட்ட பயிற்சி அளிப்பதை அறிந்து நாங்கள் நால்வரும்  பயிற்சி பெறலாம் என்று முடிவு செய்து வந்தோம்.

15 நாள் பயிற்சி, அந்த பதினைந்து நாளும் நாங்கள் மகளிர் வளாகத்திலேயே தங்கி பயிற்சி பெற்றோம்.  பின்னர் பயிற்சி முடிந்து திரும்பியதும். அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.  மாடித்தோட்டம்  பயிற்சி பெற்ற எங்களுக்கு  வேலை வாய்ப்பும் அவர்களே ஏற்படுத்தி தந்தார்கள்.  

இதன் மூலம் கிருஷ்ணசாமி கல்லூரியில் முதன்முதலில்  காய்கறி, கீரை பயிர்களை  25 கூடைகளில் அமைத்து தந்தோம்.   நாங்கள்  அமைத்த பயிர்கள் செழித்து வளர ஆரம்பித்தது. இதனால் கல்லூரி முதல்வர், தனது  வீட்டில் அமைத்து தரும்படி கேட்டார்.  அதன்பிறகு கிண்டி என்யூஎல்எம் அலுவலகம், மகேஸ்வரி ஐஏஎஸ் அம்மாவின் வீடு என ஒவ்வொரு ஆர்டராக வரத் தொடங்கின. பெரும்பாலும்  அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் என அரசு சார்ந்த இடங்களில்தான் வாய்ப்புகள் வந்தன.  நாங்கள் நன்றாக மாடித்தோட்டம் அமைத்து கொடுக்க  தொடங்கியதும்.   வங்கியில் லோன் பெற்று  மேலும் விரிவு படுத்த  தொடங்கியுள்ளோம்.  தற்போது  நால்வரும் சேர்ந்து  எங்களுக்கென ’மாடித் தோட்ட தொழிற்குழு'  என அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மாடித்தோட்டம் அமைத்து தருகிறோம். 

நவம்பர் மாதம்தான்  பயிற்சியைப் பெற்றோம். அதற்குள் 300 கூடைகளுக்கு மேல் அமைத்துக் கொடுத்துவிட்டோம். தற்போது,  அன்னை தெரசா வளாகத்தில் பயிற்சி பெற வருபவர்களுக்கு எங்களை பயிற்சி ஆசிரியராகவும் நியமித்திருக்கிறார்கள். இதுவரை 22 பேருக்கு நாங்கள் பயிற்சியும்  அளித்துள்ளோம்.   

சென்னையில் சிறந்த முறையில் மாடித் தோட்டம் அமைத்து கொடுத்ததற்காகவும், சிறந்த  பயிற்றுனர்களாகவும்   எங்களைத் தேர்வு செய்து மகளிர் வளாகத்தின் மூலம் பரிசு அளித்துள்ளனர். மாடித் தோட்டம் அமைப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் நாங்களே எடுத்துச் சென்றுவிடுவோம்.  இது நம்மால்  முடியுமா?  என்ற தயக்கத்துடன் களமிறங்கிய எங்களுக்கு  முயன்றால்  நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.