கொய்யாப்பழம், நுங்கு, நாட்டு மக்காச்சோளம், மலை நெல்லிக்காய், சீத்தாப்பழம், பனங்கிழங்கு, தர்பூசணி என சத்து நிறைந்த அருமையான கனி வகைகளும், கிழங்களும் நம்மைச் சுற்றி கையெட்டும் தூரத்தில் விலை மலிவாக கிடைத்தாலும் பெரியவர்களான நமக்கே அவற்றையெல்லாம் வீட்டுக்கு வாங்கிச் செல்லத் தோன்றுவதில்லை. ஏனென்றால், குழந்தைகளுக்கு அவையெல்லாம் பிடிக்காது. அவர்களுக்கு பீட்ஸா, பர்கர், சாக்லெட், செயற்கை குளிர்பானங்கள், ஆப்பிள், ஆரஞ்சு, பாக்கெட்டில் அடைத்த ஸ்னாக்ஸ் வகைகள் மட்டுமே பிடிக்கும் என்று அழுத்தமாக நம்பிக் கொண்டு அதையே தொடர்ந்து அவர்களுக்கு வாங்கித் தந்து கொண்டிருக்கிறோம். இந்த வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று நாம் முயல வேண்டிய நேரமிது.