டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கார்த்திக்... இந்த இளைஞனின் பாடலுக்கு மயங்காதவர்கள் யார்?

ஆடியன்ஸ் அனைவருக்கும் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கார்த்திக் பாடத்தொடங்கிய சில நிமிடங்களுக்கெல்லாம் அதைக் கேட்டுக்கொண்டிருந்த பலரது முகங்களிலும் பரவசச் சாயல், சிலர்கண்களைக்கட்டியிருந்த மாஸ்கை கழற்றி

News image
Updated On :1 ஜூன் 2019, 3:46 pm IST

இசை என்ன செய்யும்?

என்னவெல்லாமோ செய்யும். அதற்கு வரம்புகள் ஏதும் இல்லை.

ஜீ தமிழ் சரிகமப சீனியர்ஸ், இசை நிகழ்ச்சியில் கார்த்திக் என்றொரு இளைஞர், விஸ்வாசம் திரைப்படத்தின் ‘கண்ணான கண்ணே, கண்ணான கண்ணே என் மீது சாய வா’ பாடலைப் பாடுகிறார்.

ஆடியன்ஸ் அனைவருக்கும் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கார்த்திக் பாடத்தொடங்கிய சில நிமிடங்களுக்கெல்லாம் அதைக் கேட்டுக்கொண்டிருந்த பலரது முகங்களிலும் பரவசச் சாயல், சிலர்கண்களைக்கட்டியிருந்த மாஸ்கை கழற்றிக் கடாசி விட்டு அந்த அற்புத இளைஞனைப் பார்த்து நெக்குருகி அமர்ந்திருக்கிறார்கள். பாடிக்கொண்டிருக்கும் போதே மைக் வாயருகில் இருந்து நழுவிச் செல்ல, அருகே ஓடி வரும் கார்த்திக்கின் அம்மா, அந்த இளைஞரின் இலக்கற்ற கரங்களை மீண்டும் வாய்ப்புறத்தில் பிடித்துக் கொள்கிறார்.

ஆம், கார்த்திக் அவரது பெற்றோருக்கு ஸ்பெஷல் சைல்ட்.

மாற்றுத்திறனாளிகள் என்கிறோமே அவர்களில் ஒருவர் தான் கார்த்திக்.

கார்த்திக்குக்கு குட்டி, குட்டியாகத் தான் பேசத் தெரியும். அதாவது லவ் யூ கார்த்திக் என்றால், பதிலுக்கு லவ் யூ டூ என்று பதில் சொல்லத் தெரியும். யாராவது பாராட்டினால் கண்களும், கைகளும் ஒன்றுக்கொன்று ஒத்திசையாமல் வெவ்வேறு திசையில் ஆட குழந்தைத் தனமாக தேங்க்யூ சொல்லத் தெரியும். ஆனாலும், அந்த இளைஞருக்கு இந்த முழுப்பாடலையும் பாட முடிந்திருக்கிறதே அது அதிசயம் தான் இல்லையா? இதை இசையின் பேரதிசயம் என்பதா? அல்லது மாற்றுத்திறனாளி இளைஞரின் சாதனை என்பதா?

உண்மையில் கார்த்திக் நம் எல்லோரையும் விட வித்யாசமானவராக இருக்கலாம்... ஆனால் ஒரு போதும் நம்மை விட எந்த விதத்தில் குறைந்தவர் அல்ல என்பதை அறிவிக்கத்தான் ஆண்டவன் இந்த இளைஞனுக்குள் இப்படிப்பட்டதொரு திறமையை வைத்திருக்கிறார் போலும்.

கார்த்திக்கைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்ய விஷயம், இது அவரது அம்மாவே நிகழ்ச்சியின் போது பகிர்ந்தது தான்.

‘என் மகன் கார்த்தி, குழந்தையாக இருக்கும் போது , அவன் மற்ற குழந்தைகளைப்போல எல்லாம் பேசத் தொடங்கவே இல்லை. அவன் முதன்முதலில் என்னிடம் பேசவெல்லாம் இல்லை. மாறாக, அம்மா என்று அழைப்பதைப் போல ஒரு பாடலைத் தான் பாடினான். என்கிறார் கார்த்திக்கின் அம்மா.

Related Article

டோப் டெஸ்ட் குறித்து கோமதி மாரிமுத்து விளக்கம் (விடியோ)

வாழ்நாளில் 3 முறை நடந்தே உலகைச் சுற்றும் மனிதர்கள்!

லக்கி மேனுக்கு மெட்டல் டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கக் கட்டி!

இந்தா பாருங்க கத்தரி வெயிலைச் சமாளிக்க புது டெக்னிக்! காஸ்ட்லி காருக்கு மாட்டுச்சாண கவர்!

சான்ஸே இல்லை, ஆஹா என்ன ஒரு ஃபேஸியல் எக்ஸ்ப்ரஸன்! டிக்டாக் ட்ரெண்டிங் கிட்டு கோஸ்வாமி!

வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.