கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உதட்டிற்கு மேல் உள்ள முடியை நீக்கும் எளிய முறை

பெண்கள் பலருக்கும் உதட்டிற்கு மேல் முடி வளர்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. முகத்தின் அழகைக் கெடுக்கும் இதனை பலர் தவறான வழிமுறைகளில் நீக்குகின்றனர். 

News image
கோப்புப்படம்
Updated On :31 டிசம்பர் 2020, 12:46 pm

DIN

பெண்கள் பலருக்கும் உதட்டிற்கு மேல் முடி வளர்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. முகத்தின் அழகைக் கெடுக்கும் இதனை பலர் தவறான வழிமுறைகளில் நீக்குகின்றனர். 

அழகு நிலையங்களில் 'த்ரெட்டிங்' என்று சொல்லப்படும் புருவங்களை அழகுபடுத்தலின்போது பெண்கள் உதட்டிற்கு மேல் உள்ள முடிகளையும் நீக்குகின்றனர். சிலர் கிரீம் தடவி ஷேவ் கூட செய்துகொள்கின்றனர். ஆனால் இதெல்லாம் தவறான வழிமுறையாகும். 

ஏனெனில் இவ்வாறு செய்வதால் உதட்டிற்கு மேல் முடி அதிகமாகவே வளரும். எனவே, காலம் ஆனாலும் முடிந்தவரை இயற்கையான முறையில் நீக்குவது நல்லது. 

வீட்டில் உள்ள சில இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி இதனை எளிதாக நீக்க முடியும். 

முகத்தின் அழகைக் கூட்டும் மஞ்சள் தூள் பொதுவாகவே முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதைத் தடுக்கிறது. முந்தைய காலத்தில் பெண்கள் அழகுக்கு பயன்படுத்தும் முதன்மைப் பொருள் மஞ்சள். எனவே, மஞ்சள் தூளை வெறுமனே தண்ணீரில் கலந்து உதட்டின் மேல் தடவி நன்றாக காய்ந்ததும் தேய்த்து கழுவ வேண்டும். 

அதேபோன்று தயிறுடன் சிறிது கடலை மாவு, மஞ்சள் தூள் சேர்த்த கலவையை உதட்டின் மேல் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை தினமும் செய்துவர முடி வளர்ச்சி அவ்விடத்தில் தடைபடும். சாதரணமாக இந்த கலவையை கண் பகுதி தவிர முகம் முழுவதுமே தடவலாம். இதில் தயிருக்குப் பதிலாக பாலும் 

எலுமிச்சைச்சாறும் அமிலம் என்பதால் முடியை நீக்க பயன்படுகிறது. ஆனால், எலுமிச்சைச் சாற்றை தனியே பயன்படுத்தக்கூடாது. சிறிது தண்ணீர் கலந்து அதனை உதட்டின் மேல் சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.  அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்த கலவையை உதட்டின் மேல் 'ஸ்க்ரப்' செய்ய வேண்டும். 

முட்டையின் வெள்ளைக்கருவும் முடியை நீக்க பயன்படும். வெள்ளைக்கருவுடன் சிறிதளவு கோதுமை மாவு, 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலவையை உதட்டின் மேல் தடவி வர விரைவில் முடி உதிர்ந்து விடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.