அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அழகுசாதனப் பொருட்கள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்துவது ஏன்?

கிரீம்கள், அழகுசாதனப் பொருட்களில் உள்ள பலவிதமான ரசாயனக் கலவைகள் சருமத்தில் ஒவ்வாமையைத் தூண்டுகின்றன. இதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம். 

News image
Updated On :6 ஜனவரி 2020, 11:34 am

IANS

கிரீம்கள் உள்ளிட்ட சில அழகுசாதனப் பொருட்களில் காணப்படும் பலவிதமான ரசாயனக் கலவைகள் சருமத்தில் ஒவ்வாமை உள்ளிட்ட எதிர்வினைகளைத் தூண்டுகின்றன. தோலில் லிப்பிடுகள் எனப்படும் இயற்கையான கொழுப்பு போன்ற மூலக்கூறுகளை சில ரசாயனங்கள் அழிப்பதால் ஒவ்வாமை உள்ளிட்ட தோல் அழற்சிகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற தோல் அழற்சிகளை நிறுத்துவதற்கான ஒரே வழி, சருமத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ரசாயனத்தைக் கண்டறிந்து, அதனை தவிர்ப்பதுதான்.

நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள டி-செல்கள் ஒரு வேதிப்பொருளை உடலில் அனுமதிக்காதபோதுதான், ஒவ்வாமை எதிர்வினை தொடங்குகிறது. டி-செல்கள் சிறிய அளவிலான வேதிப்பொருட்களை நேரடியாக அடையாளம் காண்பதில்லை.

மாறாக, குறைந்த அளவிலான ரசாயனம் கலந்த சேர்மங்கள் மற்றொரு புரத்துடன் வேதியியல் எதிர்வினைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. 

Story image

இருப்பினும், தோல் அழற்சியைத் தூண்டும் பராமரிப்புப் பொருட்களில் பல சிறிய சேர்மங்களும் உள்ளன. ஆனால், குறைந்த அளவிலான ரசாயனம் கலந்த சேர்மங்கள் அதிக எதிர்வினைகளை கொண்டிருப்பதில்லை என்று கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

நமது தோலின் வெளிப்புற அடுக்கில் உள்ள நோயெதிர்ப்பு செல்களான லாங்கர்ஹான்ஸ் செல்கள், சி.டி.1ஏ என்ற மூலக்கூறுகள் உள்ள ரசாயனங்களை டி-செல்களுக்கு தெரியப்படுத்தும். அதன் பின்னர் டி-செல்களின் மாற்றங்களினால் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது.

இந்த வேதிப்பொருட்களில் முக்கியமானவை பெருவின் பால்சம் மற்றும் ஃபார்னெசோல். இவை தோல் கிரீம்கள், பற்பசை மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற தயாரிப்புகளில் காணப்படுகின்றன. 

பெருவின் பால்சம் குறித்து ஆராய்ச்சி செய்கையில், அதில் பென்சில் பென்சோயேட்(benzyl benzoate) மற்றும் பென்சில் சின்னாமேட்( benzyl cinnamate) ஆகியவை எதிர்வினைக்கு காரணமான ரசாயனங்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  எனவே, மேற்குறிப்பிட்ட ரசாயனங்கள் இல்லாத அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவது உங்களது சருமத்திற்கு நல்லது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.