சக ஊழியர்களுடான நட்பு வளர வேண்டுமா?

ஒரு தனிநபர் சக ஊழியர்களுடான தொடர்பு, இணக்கமான உறவாக மாறும்போது மனநிறைவு ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது.
சக ஊழியர்களுடான நட்பு வளர வேண்டுமா?
Published on
Updated on
1 min read

ஒரு தனிநபர் சக ஊழியர்களுடான தொடர்பு, இணக்கமான உறவாக மாறும்போது மனநிறைவு ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது.

தனிநபர்கள் எவ்வாறு பணிபுரிய சக ஊழியர்களுடான மனநிறைவு உண்டாகும். மேலும் இந்த தொடர்பு, உறவுகளின் தரத்திற்கு எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

பணியிடத்தில் மனநிறைவோடு வேலைசெய்யும் மேலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் 30 முறையான நேர்காணல்களை ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர். மேலும் பணியிடத்தில் மனநிறைவு கொள்கைகளைப் பயன்படுத்தும் பல்வேறு நபர்களுடன் 50-க்கும் மேற்பட்ட முறைசாரா நேர்காணல்களை நடத்தினர்.

நேர்காணல் செய்பவர்கள் பணியிடத்தில் அவர்களின் மனநிறைவை கொண்டுவருவதற்கான முயற்சிகள், அவர்களின் சக ஊழியர்களால் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக  ஆரம்ப ஆதாரங்களைக் கண்டறிந்தனர்.

நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும் சிக்கலானவை என்பதை மனநிறைவானது நமக்கு நினைவூட்டுகிறது என்று ஆராயச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஆய்வின் முடிவில், சக ஊழியர்கள் தகவல் தெரிவிப்பவர்களாக மட்டும் அல்லாமல்,   தொடர்பு கொள்ளும் வகையில் பேசும்போது, உரையாடல் விரிவடைந்து தொடர்புத் தன்மை மற்றும் மென்மையான உறவு இருக்கும். இவை செயல்திறனுக்கு உதவும்.

சக ஊழியர் சிறப்பாக செயல்பட்டால் பாராட்டுதல் வேண்டும். ஒருவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களை பாராட்டி அங்கீகரிக்கும் போது தான், உண்மையில் சிறப்பாக இணைந்து பணியாயாற்ற வழி செய்கிறது என்று கண்டறிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com