FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருக்க செய்ய வேண்டியது பற்றி...

News image

கோப்புப் படம் - Express/ Sri Loganathan Velmurugan

Updated On :12 ஆகஸ்ட் 2026, 3:43 pm IST

இரவு முழுவதும் நன்றாகத் தூங்கினாலும் காலையில் சிலர் எப்போதுமே சோர்வாகக் காணப்படுவார்கள். ஒரு டீ அல்லது காபியைக் குடித்தாலும் அதன்பிறகு வேலையைத் தொடங்கினாலும் நாள் முழுவதும் சோர்வாகவே காணப்படுவார்கள்.

அப்படியானவர்கள் காலையில் எழுந்ததும் சில செயல்களைச் செய்யும்போது உடலும் மனமும் சுறுசுறுப்பாகும்.

காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டியது...

சூரிய ஒளி

காலை எழுந்தவுடன் உடலானது சூரிய ஒளி பெற வேண்டும். சூரிய ஒளி உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தைச் சீராக்கி, மனநிலையையும் ஆற்றலையும் மேம்படுத்துவதோடு, உங்கள் உடல், வைட்டமின் டி-யை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. வைட்டமின் டி உடலில் நோயெதிர்ப்பு தன்மைக்கு முக்கியமானது.

தண்ணீர்

அதேபோல காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும். பெரும்பாலும் காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்த பிறகு சிறிது நேரம் கழித்து டீ, காபி குடிக்கலாம்.

உடற்பயிற்சி

அடுத்ததாக காலையில் லேசான உடற்பயிற்சியாவது அவசியம். காலையில் குறைந்தது ஒரு 10 - 15 நிமிடங்களாவது நடப்பது உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். எவ்வளவு சோம்பேறித்தனம் இருந்தாலும் சில நிமிடங்களாவது நடப்பதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே யோகா, உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றைச் செய்யலாம். உங்களது வேலைகளை முடித்தபிறகாவது உடல்நலனுக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

நேர்மறை சிந்தனை

சில சமயங்களில், சூழ்நிலைகள் சரியாக அமையாவிட்டாலும், ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்வது ஒரு சிறந்த உத்தியாகும். எனவே, நேர்மறை சிந்தனை மிகவும் அவசியம். காலையில் எழுந்தவுடன் இன்றைய நாளுக்காக கடவுளுக்கு நன்றி கூறி அந்த நாளைத் தொடங்குங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

திட்டமிடல்

பொதுவாக காலை எழுந்ததும் என்னென்ன வேலைகள் உள்ளது என்று தெரியாமலேயே அந்த நாளைத் தொடங்குவதைவிட அன்றைய நாள் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு பின்னர் தொடங்குங்கள். அதனை முழுமையாகச் செய்துமுடிக்கவும் முயற்சி செய்யுங்கள். அது உங்கள் மீதான தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வேலை எளிதாக முடிய இந்த பட்டியல் உதவும். உங்களுக்கான நேரமும் மிச்சப்படும். எதிர்காலத்தில் உங்களுடைய வளர்ச்சிக்கு இந்த திட்டமிடல் முக்கிய காரணமாக இருக்கும்.

Summary

What should you do to stay energetic right after waking up in the morning?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.