நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 64,553 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24 லட்சத்து 61ஆயிரத்து 191 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 48,040 -ஆக அதிகரித்தது.
மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,846 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,835 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் மேலும் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே அதிக பிளாஸ்மா வங்கிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றுக்குள்ளாகி, அதில் இருந்த மீண்ட 40 காவலர்கள் இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் அளித்தனர். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுவிடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அதனை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54519 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மேலும் 61 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை பரவலாகப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக முதல் முறையாக ரஷியா அறிவித்துள்ளது.அந்த மருந்து சிறப்பான முறையில் செயல்படுவதாகவும், தனது மகளுக்கு அந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா். விரிவான செய்திக்கு...
கரோனா நோய்த்தொற்று பரவல் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டிருந்த நியூஸிலாந்தில், 102 நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் அந்த நோய்த்தொற்று புதிதாக 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டுப் பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,878 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,871 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 49,536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் ஒரேநாளில் 53,601 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி வசந்தகுமார். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. அதோடு அவரது மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகா்ஜிக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து அவருக்கு திங்கள்கிழமை வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. எனினும் அவா் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் இருக்கிறாா். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 11,088 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் புதிதாக 6,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,848 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,834 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஒடிசா மாநிலத்தில் 80 வயது முதியவர் கரோனா தொற்று பாதித்து குணமடைந்த நிலையில், கரோனா தொற்றுக்கு அவரது மனைவி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.9 ஆயிரம் கோடி தேவைப்படுவதாகவும், அதில் 3 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..