பத்தாம் பொதுத் தேர்வில், மதுரை மாவட்டத்தில் 15 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
மதுரை மாவட்டத்தில் 438 பள்ளிகளில் இருந்து 44,767 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில், 41,828 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 15 அரசுப் பள்ளிகள் உள்பட 188 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
சதமடித்த அரசுப் பள்ளிகள்:
கடந்த ஆண்டில் 9 அரசுப் பள்ளிகள் மட்டுமே நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றிருந்தன. இந்த ஆண்டில் அதன் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அவை, அப்பக்கரை, எர்ரம்பட்டி, மேட்டுநீரேத்தான்பட்டி, கப்பலூர், மேலப்பட்டி, மாயாண்டிபட்டி, நாகானாகுளம், ப.அம்மாபட்டி, டி.புதூர், வலையங்குளம், விடத்தகுளம், வில்லூர், அயன்பாப்பாகுடி, துவரிமான், விரகனூர் ஆகியன.
இதேபோன்று, மாநகராட்சிப் பள்ளிகளில் 4 பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 5 பள்ளிகள், ஒரு நகராட்சிப் பள்ளி, ஒரு ஆதிதிராவிடர் நலப் பள்ளி, ஒரு சிறப்புப் பள்ளி, 20 அரசு உதவிபெறும் பள்ளிகள், 9 தனியார் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
அதிகபட்சமாக, 132 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் 117 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
5 ஆயிரம் பேர் நூற்றுக்கு நூறு:
தேர்வெழுதிய மாணவர்களில் 5005 பேர், வெவ்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் இருவர், கணிதத்தில் 1,443 பேர், அறிவியலில் 1,945 பேர், சமூக அறிவியலில் 1,587 பேர், சமஸ்கிருதத்தில் 28 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டில் 968 ஆக இருந்தது.
ஆங்கிலத்தில் அதிகம் பேர் தோல்வி:
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்தில்தான் அதிகமானோர் தோல்வி அடைந்துள்ளனர். 10,829 பேர் தேர்வு எழுதியதில் 1,538 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 794 பேரும், கணிதத்தில் 394 பேரும், அறிவியலில் 23 பேரும், சமூக அறிவியலில் 600 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுக்கு அழைப்பாணை

பிகாா் இளைஞா்களை கடத்தி வேலைக்கு சோ்த்துவிட்டு பணம் பறித்த 4 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது

மருத்துவரிடம் நகை, பணம் அபகரிப்பு: திருச்சி சிவா எம்.பி. மகள் மீது புகாா்

மோட்டாா் சைக்கிளில் சாகசம்: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


