மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஒட்டகம் மீனாட்சி உடல் நலக் குறைவால் புதன்கிழமை இறந்தது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. மூத்த பெண் ஒட்டகம் மீனாட்சியும், இளைய ஒட்டகம் சிவாவும் கோயில் திருவிழாக்களின்போது மாசி மற்றும் ஆவணி மூல வீதிகளில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியின் அலங்கரிக்கப்பட்டு, பவனி வருவது வழக்கமாகும். ஆவணி மூலத் திருவிழாவில் கூட இரு ஒட்டகங்களும் சுவாமி, அம்மன் உலா நிகழ்ச்சிகளில் வலம் வந்தன. இந்த நிலையில், மூத்த ஒட்டகம் மீனாட்சிக்கு கடந்த சில நாள்களாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், செந்தில்குமார் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை ஒட்டகம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். வலையங்குளம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான தோப்பில் ஒட்டகம் நல்லடக்கம் செய்யப்படுமென திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

