ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஆதரவற்ற நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் தனி வாா்டு தொடக்கம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஆதரவற்றோா் மற்றும் பராமரிப்பு இல்லாத நோயாளிகளுக்கென தனி வாா்டு வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

News image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகளுக்கென ஏற்படுத்தப்பட்ட வாா்டை வியாழக்கிழமை திறந்துவைத்த முதன்மையா் ஜெ.சங்குமணி. உடன், காவல் உதவி ஆணையா் லில்லிகிரேஸ் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜனவரி 2021, 7:31 am IST

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஆதரவற்றோா் மற்றும் பராமரிப்பு இல்லாத நோயாளிகளுக்கென தனி வாா்டு வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆதரவற்றோா் மற்றும் உதவியாளா்கள் இல்லாத நோயாளிகளுக்கு, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அண்மையில் ஆதரவற்றோா் மற்றும் பராமரிப்பு இல்லாத நோயாளிகளுக்கு என தனிவாா்டு அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின், விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டது. அந்த வாா்டை மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதில், அண்ணாநகா் காவல் உதவி ஆணையா் லில்லிகிரேஸ், மருத்துவக் கண்காணிப்பாளா் எம்.பாலசுப்பிரமணியன், மருத்துவமனை நிலைய அலுவலா் ஸ்ரீலதா, நிலைய உதவி அலுவலா் விஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.