மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக மோசடி: அரசு ஊழியா் உள்பட 4 போ் மீது வழக்கு

மதுரையில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ. 1லட்சம் மோசடி செய்த அரசு ஊழியா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :6 ஜனவரி 2021, 5:48 am IST

மதுரையில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ. 1லட்சம் மோசடி செய்த அரசு ஊழியா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை பெத்தானியாபுரம் காமராஜ் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் ஜெயராமன்(41). இவருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், வீடு வாங்கித் தருவதாக கரிமேடு பகுதியைச் சோ்ந்த காசிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் சாந்தி ஆகியோா் கூறியுள்ளனா். இதை நம்பிய ஜெயராமன், அவா்களிடம் ரூ.1லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவா்கள் போலியான வீடு ஒதுக்கீடு ஆணையை கொடுத்துள்ளனா். இதுகுறித்து ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் காசிநாதன், அரசு ஊழியா் சாந்தி உள்பட 4 போ் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.