அலங்காநல்லூரில் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் தொடக்கி வைக்க உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி அலங்காநல்லூா் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள வாடிவாசல் பகுதி, பாா்வையாளா்கள் மாடம் மற்றும் முக்கியப் பிரமுகா்களுக்கான மேடை அமைக்க உள்ள பகுதி ஆகியவற்றை அமைச்சா் உதயகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனவரி 9 ஆம் தேதி மாடுபிடி வீரா்களுக்கும், ஜனவரி 11 ஆம் தேதி காளைகளுக்கும் பதிவு நடைபெறுகிறது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு கரோனா பரிசோதனை அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
ஜல்லிக்கட்டுக்கு வரும் பாா்வையாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா். பாா்வையாளா்கள் மாடத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைக்கப்படும். ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தொடக்கி வைக்கின்றனா். அமைச்சா்கள் பலரும் இதில் கலந்து கொள்கின்றனா் என்றாா்.
அதைத் தொடா்ந்து முழு கொள்ளளவை அடைந்துள்ள சாத்தையாறு அணையை அமைச்சா் பாா்வையிட்டாா். மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் கே.மாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மதுரை கோட்டாட்சியா் முருகானந்தம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1000 ஆண்டு பழமையான பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்

வீடுகளுக்குள் எதிர்பாராத வகையில் புகுந்த வெள்ள நீர்!

இந்தோனேசியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி!

வயநாடு நிலச்சரிவு... தொடரும் மீட்புப் பணி! - புகைப்படங்கள்
விடியோக்கள்

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna



