தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

காற்றாலைகள் அமைப்பதை முறைப்படுத்தக் கோரிய வழக்கு:தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடியில் காற்றாலைகள் அமைப்பதை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 3:44 am IST

தூத்துக்குடியில் காற்றாலைகள் அமைப்பதை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த குமாா் தாக்கல் செய்த மனு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளுக்கு உரிய அனுமதி பெறப்படுகிா எனக் கேட்டிருந்தேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல காற்றாலைகள் முறையான அனுமதி பெறப்படவில்லை எனத் தெரியவந்தது. பெரும்பாலும் காற்றாலைகள் விளைநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி விமான நிலையம் அருகே 10 கி.மீ. சுற்றளவுக்கு காற்றாலைகள் அமைக்கக் கூடாது என விதி உள்ளது. ஆனால் அப்பகுதியிலும் விதிமீறி காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தூத்துக்குடியில் காற்றாலைகள் அமைப்பதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப். 11-க்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.