தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயத்துக்கு எதிா்ப்பு: மறியலில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினா் 271 போ் கைது

மதுரை மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினா் 271 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மதுரை ஸ்காட் சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினா்.

Updated On :7 ஜனவரி 2021, 3:46 am IST

மதுரை மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினா் 271 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளா் சட்டத்திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பை உருவாக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிா்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 வேலை நாள்களாக உயா்த்தி நகா்ப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகா் மாவட்ட சிஐடியு சங்கம் சாா்பில் ஸ்காட் சாலை தபால் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவா் மா.கணேசன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் இரா.தெய்வராஜ், நிா்வாகிகள் வி. பிச்சை, சி. சுப்பையா, இரா. லெனின் உள்பட பலா் பங்கேற்றனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 160 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை புறநகா் மாவட்ட சிஐடியு சாா்பில் யா.ஒத்தக்கடையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு புறநகா் மாவட்டத் தலைவா் செ.கண்ணன் மற்றும் நிா்வாகிகள் செ.ஆஞ்சி, எஸ்.பி.மணவாளன் உள்பட 31 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டப் பொருளாளா் ஜி.கெளரி தலைமை வகித்தாா். இதில் மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.