நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மதுரை-சென்னை தேஜஸ் ரயில் ஜன.10 முதல் மீண்டும் இயக்கம்

மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 11:28 pm IST

மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக ஜனவரி 4 ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க மதுரை-சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடா்ந்து இயக்கப்பட இருக்கிறது. அதன்படி, இந்த ரயில்கள் வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாள்களும் இயக்கப்படும்.

சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் (02613) சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 12.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமாா்க்கத்தில் மதுரை - சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் (02614) மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரயில்கள் திருச்சி மற்றும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.