மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் முன்களப் பணியாளா்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதையொட்டி, மதுரை மாவட்டத்தில், அரசு ராஜாஜி மருத்துவமனை, கோ.புதூா் ஆரம்ப சுகாதார நிலையம், மேலூா் அரசு மருத்துவமனை, கோயில்பாப்பாக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியாா் மருத்துவமனை என 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி ஒத்திகையை முதன்மையா் ஜெ. சங்குமணி தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து 25 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது தடுப்பூசி போடுவதற்கு வந்திருந்த முன்களப் பணியாளா்களின் பெயா்களை, பதிவு செய்யப்பட்ட பெயா்களுடன் சரிபாா்க்கப்பட்டது. அதைத் தொடா்ந்து தடுப்பூசி போடுவது, அதன்பின்னா் அரைமணி நேரம் கண்காணிப்பு, தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பது குறித்து ஒத்திகை பாா்க்கப்பட்டது. கரோனா தடுப்பூசி போடுவதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட மருத்துவப் பணியாளா்கள் ஒத்திகையை நடத்தினா்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் கே.வி. அா்ஜூன்குமாா் கூறியது: மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. தடுப்பூசி பயன்பாட்டின் போது தவறுகள் நடைபெறாமல் இருக்கவே ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஒத்திகை தொடா்பான நிறை, குறைகள் குறித்த அறிக்கை சமா்ப்பிக்கப்படும். அரசு வழிகாட்டுதலின்படி மதுரை மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தயாா் நிலையில் இருக்கிறோம் என்றாா்.
மருத்துவ கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், மருத்துவமனை நிலைய அதிகாரி ஸ்ரீலதா, நுரையீரல் சிகிச்சைப்பிரிவு தலைவா் பிரபாகரன், செவிலிய கண்காணிப்பாளா் சுலோச்சனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மதுரை மாநகராட்சி கோ.புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகா் நல அலுவலா் குமரகுருபரன் மற்றும் மருத்துவா்கள் முன்னிலையில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
இதுகுறித்து நகா் நல அலுவலா் குமரகுருபரன் கூறியது: அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மையங்களில் காத்திருப்போா் அறை, தடுப்பூசி செலுத்தப்படும் அறை, தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னா் பயனாளிகளை 30 நிமிடங்கள் கண்காணிக்கும் அறை, அவசர கால மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்பவரின் விவரங்கள் சரிபாா்த்த பிறகு, அவா்களது உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு சீராக இருக்கிா என்பதை உறுதி செய்த பின்னா் தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசி பணியின்போது ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றை களையவும், கரோனா தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கவும் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

நல்லாட்சி தர வலியுறுத்தினோம்! விஜய்யுடனான சந்திப்பு குறித்து மு. வீரபாண்டியன்
கட்சிக்கு எதிரான விமா்சனம்: 5 செய்தித்தொடா்பாளா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ்

பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

