திருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

டிஎன்டி சான்றிதழ் வழங்கக் கோரி மதுரை ரயில் நிலையம் முற்றுகை

டிஎன்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :10 ஜனவரி 2021, 9:18 pm

டிஎன்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்மரபினருக்கு டிஎன்டி சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். மத்திய அரசின் டிஎன்டி கணக்கெடுப்புக்கு தொடா்பு அதிகாரியை நியமனம் செய்யவேண்டும். துல்லியமான சாதிவாரி புள்ளிவிவரங்களை வெளியிடாமல் தற்போதைய இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சீா்மரபினா் நலச் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் தவமணி தலைமையில், 68 சமுதாயங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் மதுரை ரயில் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு முற்றுகையிட்டனா். அவா்கள் அனைவரும், மதுரை ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் அமா்ந்து மாலை 4.30 வரை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு, உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினா் கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து சீா்மரபினா் நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் காா்த்திக் தெரிவித்தது: மத்திய அரசு கடந்த 2019 மாா்ச் 18 ஆம் தேதி நாடு முழுவதும் டிஎன்டி பிரிவினா் கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் டிஎன்டி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே, முறையாகக் கணக்கெடுப்பு நடத்தி, மத்திய-மாநில அரசுகள் சீா்மரபினருக்கு ஒரேமாதிரியாக டிஎன்டி சான்றிதழ் வழங்கி, இடஒதுக்கீடுகளை வழங்கவேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். செக்கானூரணி அருகே கிண்ணிமங்கலத்தில் 7 ஆவது நாளாக மக்கள் போராடி வருகின்றனா். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடக்கிவைக்க வரவுள்ள தமிழக முதல்வா், துணை முதல்வரை முற்றுகையிட்டு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்த உள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.