தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

அடைமழை: கரும்பு, மஞ்சள்கொத்து விற்பனை பாதிப்பு

பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அடை மழை காரணமாக மதுரையில் கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

News image

மதுரை கீழமாசி வீதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மஞ்சள் கொத்துகள்.

Updated On :13 ஜனவரி 2021, 5:27 am IST

பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அடை மழை காரணமாக மதுரையில் கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது பொங்கலிடும் பானையில் மஞ்சள் கொத்து கட்டுவது வழக்கம். அதேபோல, அனைவரது வீட்டிலும் பொங்கல் படைக்கும்போது கரும்பு பிரதானமாக இடம்பெறும்.

பொங்கல் பண்டிகைக்கு இரு நாள்கள் முன்பிருந்தே கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். நிகழ் ஆண்டில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வழக்கத்தைக் காட்டிலும் பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது.

மதுரையில் யானைக்கல் பகுதியில் அதிகளவில் கரும்பு விற்பனை செய்யப்படும். இதேபோல, நகரின் பல பகுதிகளிலும் கரும்பு விவசாயிகள் நேரடியாகவும், வியாபாரிகளும் கரும்பு விற்பனை செய்வா். இந்த ஆண்டு விற்பனையாளா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

மதுரையில் 10 கட்டுகள் கொண்ட கரும்பு தரத்துக்கு ஏற்ப ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, மஞ்சள் கொத்து ஒன்று ரூ.20-இல் இருந்து ரூ.30 வரை விற்பனை ஆனது. ஆனால், மழை காரணமாக குறைந்த அளவு பொதுமக்கள் தான் கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை வாங்கிச் சென்றனா். முந்தைய ஆண்டைக் காட்டிலும், நிகழ் ஆண்டில் விற்பனை மந்தமாக இருக்கிறது. பொங்கலுக்கு ஒரு நாள் மட்டுமே இருப்பதால் புதன்கிழமை விற்பனையை நம்பியே இருக்கிறோம். மழை பெய்தால், ஒரு நாள் வியாபாரமும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.