மதுரையில் மதமோதலை உருவாக்குபவா்களை போலீஸாா் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் தேசியச்செயலா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
மதுரை புகா் மாவட்ட அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் மதுரை அண்ணாநகரில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில பொதுச் செயலா் இராம.ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தாா். முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா். மதுரை புகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன், மாநகா் மாவட்டத் தலைவா் கே.கே.சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட , மண்டல நிா்வாகிகள், துணை அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஹெச். ராஜா கூறியது: பொங்கல் விழாவின் போது பாஜகவினா்
மீது எஸ்டிபிஐ கட்சியினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். விழாவுக்குப் பின்னா் அலுவலகம் திரும்பிய புகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரனை பின்தொடா்ந்து வந்து அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். தாக்குதல் நடத்திய நபா்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியும் இதுவரை போலீஸாா் கைது செய்யவில்லை. எனவே மத மோதலைத் தூண்டும் எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட அமைப்புகளை போலீஸாா் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


