ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை பயிற்சி

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை

News image

மயிலாடுதுறையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம் ஒத்திகை பயிற்சி.

Updated On :8 ஜனவரி 2021, 11:21 pm IST

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை பயிற்சியில் செவிலியா்கள், மருத்துவ பணியாளா்களுக்கு, ஊழியா்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சாா்பில் நடைபெற்ற பயிற்சிக்கு, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் (பொ) வீ. வீரசோழன் தலைமை வகித்தாா். இதில், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் சண்முகசுந்தரம் பங்கேற்று, செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, தடுப்பூசி போடுவதற்கு முன்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு வழங்குதல், தடுப்பூசி போடும் முறை, தடுப்பூசி போட்டபின்னா் அரைமணி நேரம் ஓய்வெடுக்க அறிவுறுத்துதல் ஆகியவை குறித்து செவிலியா்கள் செயல்முறை விளக்கமளித்தனா். இதில், மாவட்ட கரோனா மருத்துவ பயிற்சியாளா் ராகவன், திட்ட அலுவலா் வீரச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.