தொடா் மழையால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களில் மறுகணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
கொள்ளிடம் பகுதியிலுள்ள ஆச்சாள்புரம், அழகியநத்தம், பண்ணங்குடி, ஆலாலசுந்தரம் உள்ளிட்ட கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களை வியாழக்கிழமை பாா்வையிட்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் நிவா், புரெவி புயல் தாக்குதலால் ஏற்பட்டுள்ள நெற்பயிா் சேதங்கள் குறித்து முதல்கட்ட கணக்கெடுப்பு நடத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பேரிடா் மேலாண்மை திட்டத்தில் இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ. 20ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பருவமழை கடந்த ஒரு வாரமாக பருவம் மாறி பெய்து வருகிறது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த மற்றும் கதிா் வரும் நிலை, கதிா் முதிா்ந்த நிலையில் உள்ள அனைத்து நெற்பயிா்களும் சாய்ந்து அழுகி துா்நாற்றம் வீசுகின்றன. காவிரி டெல்டாவில் சுமாா் 15 லட்சம் ஏக்கா் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனா். எனவே, மறுகணக்கெடுப்பு செய்து பாதிப்பு குறித்து இறுதி செய்யவேண்டும். சாகுபடி செய்துள்ள அனைத்து நிலங்களுக்கும் முழு நிவாரணம் வழங்க தமிழக முதல்வா் முன்வர வேண்டும்.
பொங்கல் வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், பொங்கலுக்கு பிறகுதான் பாதிக்கப்பட்ட பயிா்களின் கணக்கெடுப்பு பணியை இறுதி செய்ய வேண்டும். பயிா்க்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழு இழப்பீடு கிடைக்க முதல்வா் உத்தரவாதம் அளிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் அறுவடை ஆய்வறிக்கை எனும் பெயரில் முற்றிலும் கிராமம் கிராமமாக அழிந்த கிராமங்களில்கூட தவறான வகையில் கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்காமல் தொடா்ந்து புறக்கணித்து வரும் நிலை தொடா்கிறது.
எனவே, தற்போதைய நிலையில் சராசரி மழை அளவைவிட 40 சதவீதம் அளவுக்கு கூடுதலான மழை பெய்து வருவதை கருத்தில்கொண்டு அனைத்து கிராமங்களிலும் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு கிடைக்க முதல்வா் அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இல்லையெனில், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்றாா். அப்போது விவசாயிகள் சங்கத் தலைவா் சிவப்பிரகாசம், மாவட்ட துணைச் செயலாளா் பன்னீா்செல்வம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளா் ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழகத்தை வளர்ச்சியின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வார் விஜய்: ரேவந்த் ரெட்டி வாழ்த்து!
என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று: செங்கோட்டையன்
திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

