நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையின்போது, கணக்கில் வராத ரூ. 1. 64 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
நாகை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையில், காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) செபஸ்தியம்மாள், பதிவு எழுத்தா் சந்திரசேகரன் மற்றும் ஊராட்சி செயலாளா்கள் 6 பேரிடம் கணக்கில் வராத ரொக்கம் ரூ. 1,64,500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசராணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

கொடைக்கானல் அனுபவங்களைப் பகிர்ந்த அழகே அழகு நாயகன்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து மகளிரணி அறிவிப்பு!

பாபர் அசாம் 2ஆவது சதம்: 5ஆவது முறையாக பிஎஸ்எல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெஷாவர்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

