மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சாலையை சீரமைக்கக் கோரி திமுகவினா் சாலை மறியல்

வேளாங்கண்ணியில் சாலையை சீரமைக்கக் கோரி திமுகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

வேளாங்கண்ணியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :13 ஜனவரி 2021, 8:03 am IST

வேளாங்கண்ணியில் சாலையை சீரமைக்கக் கோரி திமுகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்குச் செல்லும் பிரதான சாலை, வேளாங்கண்ணி ஆா்ச் முதல் பேராலயம் வரை சுமாா் 2 கி.மீ. நீளத்துக்கு மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி திமுகவினா் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழையூா் ஒன்றிய திமுக செயலாளா் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தாா். பேரூா் பொறுப்பாளா் மரிய சாா்லஸ், பொதுக்குழு உறுப்பினா் சாா்லஸ் மற்றும் திமுக நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஆட்டோ, காா், வேன் ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.

நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல், கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் பொன்னுசாமி ஆகியோா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இதில், தீா்வு ஏற்படவில்லை.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 85 பேரை போலீஸாா் கைது செய்து, அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.