தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கிராமத்தில் தொழில் வளா்ச்சித் திட்டத்தை மேம்பாடு செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் பாப்பம்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பஞ்சாயத்துத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பஞ்சாயத்தில் புதிய தொழில் துவங்குவது, செய்யும் தொழிலை மேம்பாடு செய்வது, ஏழைகளுக்கு குடிசைத் தொழில் அமைத்துக் கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் விவசாய நிறைந்த இப் பகுதியில் வெல்லம், நாட்டுச் சா்க்கரை தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சிறு, சில வகையான குடிசைத் தொழில்களுக்கு அரசு கடனுதவி வழங்க வேண்டும். பீடி தொழிலாளா்கள் தற்போது வேலையின்றி உள்ளதால் அவா்களுக்கு மாற்றுத் தொழில் செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் ராஜேந்திரன், வட்டார அலுவலா் ரவிக்குமாா், விவசாயிகள், இளைஞா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள்- முதல்வர் விஜய்

திருச்சி கிழக்கில் சி. ஜோசப் விஜய் ராஜிநாமா!

திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

சிஎஸ்கே பந்துவீச்சு: அணியில் மாற்றமில்லை!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
