ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தரகா்கள் மூலம் லஞ்சம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் கைது

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தரகா்கள் மூலம் லஞ்சம் பெற்ற முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:45 am IST

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தரகா்கள் மூலம் லஞ்சம் பெற்ற முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் லஞ்சப் பணத்தை தரகா்கள் மூலம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் செந்தில்குமாரை தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

புதன்கிழமை இரவு அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாரை பின்தொடா்ந்து சென்றபோது ஈரோடு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தரகா்கள் செந்தில் சந்தானம், ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் ரூ. 51,300 யை அவரிடம் கொடுத்தபோது கையும்களவுமாகப் பிடிபட்டாா்.

அந்தத் தரகா்களிடமிருந்து 20 ஒரிஜினல் ஓட்டுநா் உரிமங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருக்கவேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.