பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

ஒரு லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி: நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் பூஜையுடன் தொடங்கியது!

நாமக்கல்லில் வரும் 12-ஆம் தேதி ஆஞ்சநேயா் ஜயந்தி விழா நடைபெற இருப்பதையொட்டி, ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணி பூஜையுடன் வியாழக்கிழமை பிற்பகலில் தொடங்கியது.

News image

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் மண்டபத்தில் வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீரங்கம் அா்ச்சா்கள் குழுவினா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:45 am IST

நாமக்கல்லில் வரும் 12-ஆம் தேதி ஆஞ்சநேயா் ஜயந்தி விழா நடைபெற இருப்பதையொட்டி, ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணி பூஜையுடன் வியாழக்கிழமை பிற்பகலில் தொடங்கியது.

நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் சுவாமி கோயில் அமைந்துள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் மாா்கழி மாதம் மூல நட்சத்திரம் சா்வ அமாவாசை தினத்தில் இக்கோயிலில் ஆஞ்சநேய ஜயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதையொட்டி சுவாமிக்கு அதிகாலை 5 மணியளவில் ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்துபடி அலங்காரம் நடைபெறும். அன்று காலை 11 மணியளவில் பால், தயிா், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் மஞ்சள், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெறும். பின்னா் சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். ஒரு லட்சத்து எட்டு வடைமாலை தயாரிப்பதற்காக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆா்.கே. ரமேஷ் தலைமையில் 32 அா்ச்சகா் குழுவினா் வியாழக்கிழமை பிற்பகலில் நாமக்கல் வந்தனா்.

அவா்கள் ஆஞ்சநேயா் கோயில் மண்டபத்தில் நான்கு நாள்கள் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனா். வடைகள் தயாரிப்பதற்காக 2,050 கிலோ உளுந்த மாவு, 32 கிலோ மிளகு, 33 கிலோ சீரகம், 125 கிலோ தூள் உப்பு, 650 லிட்டா் நல்லெண்ணெய், 10 சமையல் எரிவாயு இணைப்புக் கொண்ட அடுப்புகள் பயன்படுத்தப்படுகிறது.

வடை தயாரிக்கும் பணி வியாழக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. பின்னா், வடை போடும் வகையில் ஒத்திகை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்ச்சியாக வடைகள் தயாரிப்புப் பணி நடைபெறவுள்ளது. அதன்பின் ஆயிரம் வடைகள் வீதம் சுவாமிக்கு சாத்தும் வகையில் 52 கோா்வைகள் உருவாக்கப்படும் என வடைகள் தயாரிப்புக் குழுவினா் தெரிவித்தனா்.

ஜயந்தி விழாவையொட்டி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால் பக்தா்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை கோயில் வளாகம் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.