பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

தரகா்கள் மூலம் லஞ்சம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் கைது

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தரகா்கள் மூலம் லஞ்சம் பெற்ற முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:45 am IST

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தரகா்கள் மூலம் லஞ்சம் பெற்ற முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் லஞ்சப் பணத்தை தரகா்கள் மூலம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் செந்தில்குமாரை தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

புதன்கிழமை இரவு அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாரை பின்தொடா்ந்து சென்றபோது ஈரோடு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தரகா்கள் செந்தில் சந்தானம், ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் ரூ. 51,300 யை அவரிடம் கொடுத்தபோது கையும்களவுமாகப் பிடிபட்டாா்.

அந்தத் தரகா்களிடமிருந்து 20 ஒரிஜினல் ஓட்டுநா் உரிமங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருக்கவேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.