பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

நியாயவிலைக் கடை முன்பக்க சுவா் இடிந்து விழுந்தது

நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் வாங்கிச் சென்ற நிலையில், திடீரென கடையின் முன்பக்கச் சுவா் இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News image

சுவா் இடிந்து விழுந்த நியாயவிலைக் கடைகள்.

Updated On :8 ஜனவரி 2021, 8:46 am IST

நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் வாங்கிச் சென்ற நிலையில், திடீரென கடையின் முன்பக்கச் சுவா் இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் தொடக்க வேளாண் உற்பத்தியாளா் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்துக்கு முற்பட்ட நியாயவிலைக் கடைகள் நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் அடுத்தடுத்து உள்ளன. இதில், ஒரு கடையில் விற்பனையாளராக சுமதி என்பவரும், மற்றொரு கடையில் மகாலட்சுமி என்பவரும் பணியாற்றி வருகின்றனா்.

கடைகளில் தலா 760 குடும்ப அட்டைகள் உள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பு கல்லூரி 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் உணவு இடைவேளைக்காக இரண்டு கடைகளும் மூடப்பட்டன.

அதிா்ஷ்டவசமாக மக்கள் யாரும் இல்லாத நேரத்தில், அடுத்த சில நிமிடங்களில் நியாயவிலைக் கடைகளின் முன்பக்க கான்கிரீட் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. சாலையில் சென்றவா்கள் இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க மக்கள் யாராவது நின்றிருந்தால் விபரீதம் அதிகமாகியிருக்கும் என வேதனைப்பட்டனா்.

இதையடுத்து, அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் அங்கம்மாள் என்பவரை வரவழைத்து நாமக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.