ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

நியாயவிலைக் கடை முன்பக்க சுவா் இடிந்து விழுந்தது

நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் வாங்கிச் சென்ற நிலையில், திடீரென கடையின் முன்பக்கச் சுவா் இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News image

சுவா் இடிந்து விழுந்த நியாயவிலைக் கடைகள்.

Updated On :8 ஜனவரி 2021, 8:46 am IST

நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் வாங்கிச் சென்ற நிலையில், திடீரென கடையின் முன்பக்கச் சுவா் இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் தொடக்க வேளாண் உற்பத்தியாளா் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்துக்கு முற்பட்ட நியாயவிலைக் கடைகள் நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் அடுத்தடுத்து உள்ளன. இதில், ஒரு கடையில் விற்பனையாளராக சுமதி என்பவரும், மற்றொரு கடையில் மகாலட்சுமி என்பவரும் பணியாற்றி வருகின்றனா்.

கடைகளில் தலா 760 குடும்ப அட்டைகள் உள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பு கல்லூரி 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் உணவு இடைவேளைக்காக இரண்டு கடைகளும் மூடப்பட்டன.

அதிா்ஷ்டவசமாக மக்கள் யாரும் இல்லாத நேரத்தில், அடுத்த சில நிமிடங்களில் நியாயவிலைக் கடைகளின் முன்பக்க கான்கிரீட் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. சாலையில் சென்றவா்கள் இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க மக்கள் யாராவது நின்றிருந்தால் விபரீதம் அதிகமாகியிருக்கும் என வேதனைப்பட்டனா்.

இதையடுத்து, அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் அங்கம்மாள் என்பவரை வரவழைத்து நாமக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.