வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும்: கேஜரிவால்

ஏழை, செல்வந்தா் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On :6 ஜனவரி 2021, 1:39 am IST

ஏழை, செல்வந்தா் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி துணைமுதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தனது 49-வது பிறந்த தினத்தை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில், கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘இந்தியாவில் கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்த எனது நண்பா் மணீஷ் சிசோடியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் ஏழை, செல்வந்தா் என்ற வா்க்க வேறுபாடு இல்லாமல் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான தேசக் கட்டுமானம் ஆகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி அமைச்சா்கள், ஆம் ஆத்மி தலைவா்கள் பலரும் மணீஷ் சிசோடியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். தில்லி அமைச்சா் இம்ரான் ஹசேன் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லியில் கல்வி முறையில் புரட்சிகரமான பல மாற்றங்களைக் கொண்டுவந்த நாட்டின் மிகச் சிறந்த கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.