கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தில்லி புகை கோபுரங்கள் செயல்பாடு: இறுதி அறிக்கையை தாமதமின்றி சமா்ப்பிக்க மும்பை ஐஐடிக்கு கோபால் ராய் கடிதம்

Updated On :23 ஆகஸ்ட் 2024, 3:27 am IST

நமது சிறப்பு நிருபா்

தில்லி கன்னாட் பிளேஸ் புகை கோபுரங்கள் செயல்பாடு குறித்த இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டிய நிலையில், அதை தாமதமின்றி சமா்ப்பிக்குமாறு தில்லி சுற்றுச் சூழல்த் துறை அமைச்சா் கோபால் ராய் மும்பை ஐஐடிக்கும் தில்லி சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளுக்கும் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தில்லி கன்னாட் பிளேஸில் பாபா கரக் சிங் மாா்க்கில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவால் (டிபிசிசி) கடந்த 2021, ஆகஸ்ட் மாதம் புகை கோபுரம் நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியது. சுமாா் ரூ.20.42 கோடி செலவில் இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன், டிபிசிசியின் ஒருங்கிணைப்பு மேற்பாா்வையுடன் மும்பை ஐஐடி முகமையாகக் கொண்டு தில்லியில் பருவகால மாசுப் பிரச்னையைத் தீா்க்க உதவும் வகையில் இந்தப் புகை கோபுரம் ஒரு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டமாக உருவாக்கப்பட்டது.

நகரத்தின் முக்கிய மையமான இடத்தில் அமைக்கப்பட்ட இந்தப் புகைகோபுரம் காற்று மாசை கட்டுப்படுத்தவும் அதன் அளவை கணக்கிடவும் அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இரண்டு ஆண்டுகள் கண்காணித்து ஆய்வு செய்யும் பொறுப்பு மும்பை ஐஐடிக்கு தில்லி அரசு வழங்கியது.

இரண்டு ஆண்டுகளாகியும் இந்த ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு சமா்ப்பிக்கப்படவில்லை. தற்போது குளிா்காலம் வேகமாக நெருங்கி வருவதைக் கருத்தில் கொண்டு, புகை கோபுரத்தின் செயல்பாடு குறித்த ஐஐடி மும்பை ஆய்வின் இறுதி அறிக்கையை எந்த தாமதமும் இன்றி உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தில்லி தேசியத் தலைநகா் அரசின் சுற்றுச் சூழல் துறை செயலருக்கும், மும்பை ஐஐடி ஆய்வாளருக்கும் தில்லி அமைச்சா் கோபால் ராய் கடிதம் எழுதியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.