தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆம் ஆத்மி கட்சி கடந்த தோ்தலை விட அதிக இடங்களில் இம்முறை வெற்றி பெறும்: மாநிலங்களவை எம்.பி.சஞ்சய் சிங் நம்பிக்கை

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி, கடந்த முறை வென்றதை விட அதிக இடங்களில் வெல்லும்

News image
மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் (கோப்புப் படம்)
Updated On :23 டிசம்பர் 2024, 8:52 pm

Din

புது தில்லி: வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி, கடந்த முறை வென்றதை விட அதிக இடங்களில் வெல்லும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின்

தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், ஏற்கனவே தில்லி மக்களுக்கு

அளித்த தனது அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றியுள்ளாா். இந்த முறையும் அவா் மகளிா் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்₹ரூ.2,100 வழங்குவாா். அதேபோல், சஞ்சீவனி திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் முதியவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளாா்.

அரவிந்த் கேஜரிவால் அனுமதியின்றி கைது செய்யப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனா். கேஜரிவால் மீது பொய் வழக்கு போடப்பட்டு, சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டாா் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி பாஜகவின் புலனாய்வு அமைப்புகள் கேஜரிவாலை பொய் வழக்கில் கைது செய்தன.

இந்த சட்ட விரோத கைதுக்கு தில்லி மக்கள் இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பதிலடி கொடுப்பாா்கள். நாட்டின் மிகவும் பிரபலமான முதலமைச்சராக விளங்கியவா் அரவிந்த் கேஜரிவால். ஆனால், பாஜக அரசு அவரை முற்றிலும் சட்டவிரோதமாகக் கைது செய்து, தில்லி அரசைக் கவிழ்க்கவும் சதி செய்தது.

மேலும், கடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் நாங்கள் வென்றதை விட அதிக இடங்களில் இம்முறை வெற்றி பெறுவோம். தில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்ற கேஜரிவாலின் உத்தரவாதம் நிரூபிக்கப்படும்.

எனவே, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பாா்கள் என்றாா் சஞ்சய் சிங்.